நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

மஞ்சள் முகம்...,
குங்குமம் வைத்த பிறை..,
ஒளியேற்றும் மூக்குத்தி...,
காற்குழலுடன் போட்டியிடும் 
பூ சரம்..,
இடையுறு தந்தாலும்
கதைபேசும் வளைவி...,
மெல்லிசையுடன்
துணை நடக்கும் காற்சலங்கை...,
லாவகமாய் என்னை அணைத்துக்கொண்டு
அழகுக்கு அழகு சேர்க்கும் சேலை...
பணியின் நிமித்தம் இழந்து விட்டாலும்..,
காதலுடன் ஏங்கி நிற்கும் மனம்....,


                                               - கலைவாணி (ஆகஸ்ட் 22 ' 2012 )

No comments: