நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

காதல்

பாதை கண்ணுக்கு தூரமா தெரியுது
விளக்கொழிய துணையா வச்சு 
நா காத்து கெடக்கும் போது...,
உன்னோடு மல்லுகட்டி 
வாய் பேச என் கொலுசும் தான் 
காத்து கெடக்கு என்ன போல..,
நாரோட சேர்த்து கட்டிக்கம்ம
என் மனசுபோல தரையில
விழுந்து கெடக்கு பூவு...,
நேத்து நீ செஞ்ச குறும்புல
ஒடஞ்சு போன வளவிபோல
இன்னொன்னும் ஒடைய காத்துகிடக்கு..,
என் கைமணத்துல செஞ்சுவச்ச
மீன்கொழம்பும்,
சீவிசிங்கரிச்ச என் அழகும்..,
உன்ன நாசபடுத்தும்
சாராயம் முன்னாடி
தோத்துத்தான் போச்சே..
என் கண்ணிற்துளிக்கு பதில்
சொல்லமுடியாம
நிலவும் தான் ஓடி ஒளியுதையா..
குடிச்சு அழியிறனு
கோவத்துல சண்டபுடிக்க
மடிமேல செஞ்சுகிட்டு கேப்ப
"சோறு சாப்புட்டியா புள்ள ?"
ஒத்த வார்த்தையில
நெஞ்சுல கூட்டிவச்ச
நெருப்பெல்லாம் அணைச்சுபுடுற..,
எத்தன உனக்கென்ன நா கெடந்தாலும்
உன் பாசத்துல
என் பாசம் தோத்துத்தான்
போயிடுது....,


                                           - கலைவாணி ( ஆகஸ்ட் 22 ' 2012 )




No comments: