நன்றி இவர்களுக்கு...

Monday, 12 August 2013

நான் பறக்கும் தருணம் வந்தும் 
மிதந்து நிற்கிறேன்...,
இவ்விடத்தின் 
அமைதி 
என்னுள் ஆழ்ந்த்திருப்பதால்........

                                                      - கலைவாணி 



மழை

இன்னும் போதவில்லை
உன் நனைவித்தலை அதிகப்படுத்து.,


                                 - கலைவாணி ( ஆகஸ்ட் 22 ' 2012 ) 

பெண்கள்

இந்த சுதந்திர பொழுது 
வானம் போல் பறந்து விரியட்டும்...
விதிகள் இல்லாமல் ...,

                                      - கலைவாணி (ஆகஸ்ட் 22 ' 2012 ) 

காதல்

பாதை கண்ணுக்கு தூரமா தெரியுது
விளக்கொழிய துணையா வச்சு 
நா காத்து கெடக்கும் போது...,
உன்னோடு மல்லுகட்டி 
வாய் பேச என் கொலுசும் தான் 
காத்து கெடக்கு என்ன போல..,
நாரோட சேர்த்து கட்டிக்கம்ம
என் மனசுபோல தரையில
விழுந்து கெடக்கு பூவு...,
நேத்து நீ செஞ்ச குறும்புல
ஒடஞ்சு போன வளவிபோல
இன்னொன்னும் ஒடைய காத்துகிடக்கு..,
என் கைமணத்துல செஞ்சுவச்ச
மீன்கொழம்பும்,
சீவிசிங்கரிச்ச என் அழகும்..,
உன்ன நாசபடுத்தும்
சாராயம் முன்னாடி
தோத்துத்தான் போச்சே..
என் கண்ணிற்துளிக்கு பதில்
சொல்லமுடியாம
நிலவும் தான் ஓடி ஒளியுதையா..
குடிச்சு அழியிறனு
கோவத்துல சண்டபுடிக்க
மடிமேல செஞ்சுகிட்டு கேப்ப
"சோறு சாப்புட்டியா புள்ள ?"
ஒத்த வார்த்தையில
நெஞ்சுல கூட்டிவச்ச
நெருப்பெல்லாம் அணைச்சுபுடுற..,
எத்தன உனக்கென்ன நா கெடந்தாலும்
உன் பாசத்துல
என் பாசம் தோத்துத்தான்
போயிடுது....,


                                           - கலைவாணி ( ஆகஸ்ட் 22 ' 2012 )




மஞ்சள் முகம்...,
குங்குமம் வைத்த பிறை..,
ஒளியேற்றும் மூக்குத்தி...,
காற்குழலுடன் போட்டியிடும் 
பூ சரம்..,
இடையுறு தந்தாலும்
கதைபேசும் வளைவி...,
மெல்லிசையுடன்
துணை நடக்கும் காற்சலங்கை...,
லாவகமாய் என்னை அணைத்துக்கொண்டு
அழகுக்கு அழகு சேர்க்கும் சேலை...
பணியின் நிமித்தம் இழந்து விட்டாலும்..,
காதலுடன் ஏங்கி நிற்கும் மனம்....,


                                               - கலைவாணி (ஆகஸ்ட் 22 ' 2012 )

நேசம்

நான் விழுந்து
விடமாட்டேன் என்று 
என்னை விட 
நீதான் 
திடமாய் நம்புகிறாய்..., 

                              - கலைவாணி 



              
திரையை விலக்கி
என்றேனும் 
வெளிவருவேன்...,
உன்னுடனே 
பறந்து செல்ல.....

                     - கலைவாணி